ஜெயலலிதா நினைவு நாள்.. டுவிட்டரில் ஒரே புரொபைல் பிக்சர்.. உருக்கமாக பதிவிட்ட ஒபிஎஸ்-ஈபிஎஸ்!
சென்னை: நாளை(டிசம்பர் 5) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த தினம் என்பதால் டுவிட்டரில் ஒரே புரொபைல் பிக்சரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வைத்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பிறகு அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் ஆகியோரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

இந்நிலையில் 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினர் துக்க நாளாக டிசம்பர் 5ம் தேதியை அணுசரித்து வருகிறார்கள்.
நாளை டிசம்பர் 5ம் தேதி என்பதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பை துக்கமாக அணுசரிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் ஆகியோர் டுவிட்டரில் ஒரே புரொபைல் பிக்சரை வைத்துள்ளனர்.
அதில் ஜெயலலிதா படத்தில் "இதய தெய்ம் புரட்சி தலைவி அம்மா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜெயலலிதா மரணம் அடைந்தை குறிப்பிடும் வகையில் டிசம்பர் 5ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கு கீழ் இருந்தாலும்,மறைந்தாலும் பேர் செல்ல வேண்டும்! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! என குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications