’விஸ்வரூபம்’ வெளியாக ஜெயலலிதா உதவி.. இல்லையென்றால் படமே வெளியாகியிருக்காது.. எஸ்.பி.வேலுமணி விளக்கம்
ஜெயலலிதா உதவவில்லையென்றால் விஸ்வரூபம் படம் வெளியாகி இருக்காது என்று எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை: கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் ஜெயலலிதா உதவவில்லை என்றால் வெளியாகி இருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதேபோல், திமுக கூட்டணியில் இருப்பதால் கமல்ஹாசன் அவதூறாகப் பேசுவதாகவும் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார்.

கமல்ஹாசன் பேச்சு
ஈரோட்டில் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது பேசுகையில், சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. இன்று விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை. இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்கும் லாபத்திற்கும் இல்லை.

விஸ்வரூபம் விவகாரம்
விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டும் என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். இப்போது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என்றார் ஸ்டாலின் என்று பேசியது விவாதத்தை ஏற்படுத்தியது.

எஸ்.பி. வேலுமணி விளக்கம்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். அதில், விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படம் வெளியாக ஜெயலலிதா உதவினார். ஜெயலலிதா உதவவில்லை என்றால் விஸ்வரூபம் படமே வெளியாகி இருக்காது. திமுக கூட்டணியில் இருப்பதால் கமல்ஹாசன் அவதூறாகப் பேசுகிறார் என்று கூறினார்.

திமுகவுக்கு அடிமை
தொடர்ந்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணி மட்டுமே வைத்துள்ளது. அதிமுகவின் கொள்கைகள் வேறு. பாஜகவின் கொள்கைகள் வேறு. பாஜகவுக்கு ஒருபோதும் அதிமுக பயப்படவில்லை. பாஜகவுக்கு பயப்படுவது திமுக தான். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அக்கட்சிக்கு அடிமையாக உள்ளன. அந்த வரிசையில் கமல்ஹாசனும் இணைந்துள்ளார் என்று விமர்சித்தார்.
-
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications