ஜெயலலிதா வானத்திலிருந்து அதிமுகவை பார்க்கிறார்.. அந்த பயம் எங்களுக்கு உள்ளது.. ஓபிஎஸ் உருக்கம்!
ஜெயலலிதா, வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார், அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசி உள்ளார்.
சென்னை: ஜெயலலிதா, வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார், அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி உள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலும் 18 தொகுதி சட்டசபை தேர்தலும் முடிந்துள்ளது. இன்னும் 4 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் தற்போது தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் மீண்டும் களைகட்டி இருக்கிறது. சட்டசபை இடைத் தேர்தலுக்காக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தல்.. ராமதாஸ், விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வருவார்களா.. காத்திருக்கும் அதிமுக
அதிமுக தொண்டன்
பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன்.
திமுக ஆட்சி
திமுக, ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவு காண்கிறது. திமுக இந்த லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் இரண்டிலும் படுதோல்வி அடையும். மொத்தமாக ஸ்டாலினின் ஆட்சியை பிடிக்கும் கனவு காணாமல் போகும் அளவிற்கு மக்கள் பாடம் புகற்றுவார்கள்.
அதிமுக எப்படி
அதிமுக கட்சி சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா, வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
பயம் போதும்
அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது. நாங்கள் அந்த பயத்தில்தான் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம். அவரின் வழியில்தான் அதிமுக ஆட்சி சென்று கொண்டு இருக்கிறது. எப்போதும் அவர் வழி காட்டிய திசையில் நாங்கள் பயணிப்போம், என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.