முதல்வரின் பாச வலையில் பூங்குன்றன்.. இ.பி.எஸ்.க்கு வரவேற்பு கவிதை
Recommended Video
சென்னை : ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த அணியிலும் சேராமல் இருந்துவந்த அவரது உதவியாளர் பூங்குன்றன், முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புகராழம் சூடியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை போயஸ் கார்டன் பூங்குன்றனின் அறிமுகத்துக்காக அதிமுகவில் காத்திருந்தவர்கள் பலர். ஜெயலலிதாவிடம் நேரடியாக பேசக்கூடிய இடத்தில் இருந்ததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் என அனைவரும் பூங்குன்றனை கண்டால் விழுந்து விழுந்து மரியாதை செய்தது ஒரு காலம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிலைமை அப்படியே தலைகீழானது. பூங்குன்றன் என்றால் யார் எனக் கேட்கும் அளவுக்கு சூழல் மாறியது. இதனால் வெறுத்துப்போன பூங்குன்றன் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இப்படி யார் அணியிலும் சேராமல் அமைதிக்காத்து வந்தார். மேலும், சென்னையில் இருப்பதை தவிர்த்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தில் பெரும்பாலும் தங்கத் தொடங்கினார்.
சசிகலாவால் போயஸ் கார்டனுக்கு அழைத்துவரப்பட்டவர் பூங்குன்றன் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கமும் ஜெயலலிதாவிடம் பணியாற்றி அவரது நன்மதிப்பை பெற்றவர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியுள்ளதை அடுத்து, கவிதை நடையில் பூங்குன்றன்அவரை வரவேற்றூள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள பூங்குன்றன்,
முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்; மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய், அயல்நாட்டிற்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி விவசாயி நானென்றாய், ஆங்கில நாட்டிற்கே சென்றாலும்; தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே ! தமிழனாய் உனை வரவேற்வேற்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
பூங்குன்றனின் திடீர் முதல்வர் பாசம் குறித்து விசாரித்ததில், டி.டி.வி.தினகரன் மீதான அதிருப்தியையும், வருத்தத்தையும் வெளிக்காட்டவே அவர் இ.பி.எஸ்.க்கு புகாழரம் சூடியதாக கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications