இனி பொதுமக்கள் பார்வைக்கு.. நினைவில்லமாகும் ஜெயலலிதாவின் வேதா இல்லம்.. தமிழக அரசு அவசர சட்டம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லத்தில்தான் வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின் அந்த வீடு பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஏற்கனவே வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

Jayalalithas Poes Gardens Vedha Illam will be transferred into memorial

இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டு கழித்து இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இதற்காக அறக்கட்டளை உருவாக்கப்படும். தமிழக முதல்வர் இதன் தலைவராக இருப்பார். துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்த வீடு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது, என்று அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+