ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு! 24 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்
சென்னை: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. ஜேஇஇ மெயின் தேர்வில் 24 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஜேஇஇ 2 ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜேஇஇ - யில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது.

2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மாதம் 22 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 14 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று இருந்தனர்.
இந்த நிலையில், ஜேஇஇ 2 ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஜேஇஇ முதல் நிலை 2 ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இந்த தேர்வில் 24 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களை வைத்து இந்தியாவில் உள்ள 100 அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியும். ஐஐடி கல்வி நிறுவனங்களில் இந்த மதிப்பெண்களை வைத்து சேர முடியாது. தேர்வு முடிவினை jeemain.nta.nic.in. என்ற இந்த லிங்கில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications