என்னங்க இது? சமணர்களின் கோயிலை சுற்றுலா தலமாக மாற்றுவதா?.. "தப்பு".. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சமணர்களின் புனித கோயிலை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிருதிஹ் மாவட்டத்தில் பரஸ்நாத் மலைத் தொடர் உள்ளது. 1366 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை தான், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய மலை ஆகும்.
இந்த மலையின் உச்சியில் சமணர்களின் புனித கோயிலான சம்மேத ஷிகார்ஜி கோயில் உள்ளது. அக்கோயில் உள்ளிட்ட மலைப்பகுதியை சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவித்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

"சமணர்களின் கோரிக்கை நியாயமானவை"
அதன்படி, சமணர்களின் கோயிலை சுற்றுலா தலமாக மாற்றும் பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் தான், அதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சமணர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் சமணர்கள் இன்று பேரணி நடத்தியிருக்கின்றனர். சமணர்களின் உணர்வுகள் நியாயமானவை; அவை மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.

புனிதம் கெட்டுவிடும் என அச்சம்
பரஸ்நாத் மலையில் உள்ள ஷிகார்ஜி கோயிலில் சமணர்கள், அந்த சமுதாய குருக்களின் வழிகாட்டுதலின்படி ஒழுங்கையும், தூய்மையையும் கடைப்பிடித்துதான் வழிபாடு நடத்துவார்கள். எறும்புகளுக்குக் கூட எந்த தீங்கும் இழைத்து விடக் கூடாது என்பதே சமணர்களின் கொள்கை ஆகும். அதை அவர்கள் எந்த சமரசமும் இல்லாமல் பின்பற்றி வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநில அரசின் திட்டப்படி, பரஸ்நாத் மலை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு மது அருந்தி விட்டு, புலால் உணவுகளை உண்ணக்கூடும் என சமணர்கள் அஞ்சுகின்றனர்.

செயல்பாடுகளுக்கு தடை
அது அந்த கோயிலின் புனிதத்தை கெடுத்து விடும் என்றும் சமணர்கள் கவலைப்படுகின்றனர். அவர்களின் அச்சமும், கவலையும் நியாயமானவையே. சமணர் அமைப்புகளின் பிரதிநிதிகளை இதுதொடர்பாக அழைத்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், பரஸ்நாத் மலையில் சுற்றுலா தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் தடை செய்து ஆணையிட்டிருக்கிறார்.

"முடிவுக்கு கொண்டு வர வேண்டும்"
அந்த ஆணையை செயல்படுத்தும்படி ஜார்க்கண்ட் மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தான் சிக்கலுக்கான தீர்வாகத் தோன்றுகிறது. எனவே, பரஸ்நாத் மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஜார்க்கண்ட் அரசு திரும்பப் பெற வேண்டும். அதன் மூலம் சமணர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications