அன்றே எச்சரித்த துரைமுருகன்.. சென்னைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு.. ஜோலார்பேட்டையில் மக்கள் போராட்டம்
தண்ணீர் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி ஜோலார்பேட்டை மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
Recommended Video
சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணி எடுத்தீங்கன்னா.. வேலூர் மாவட்டம் முழுக்க போராட்டம் வெடிக்கும்" என்று துரைமுருகன் அன்று சொன்னது இன்று நிரூபணமாகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வாயை திறந்து சொல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு போன முறை ஆட்சி செய்த திமுகதான் காரணம் என்று அதிமுகவும், 7 வருஷமாக தண்ணீர் பிரச்சனையை தீர்க்காமல் என்ன செய்கிறீர்கள்? என்று அதிமுகவை திமுகவும் மாறி மாறி விமர்சித்து வருகின்றன.
இதற்காக அதிமுக கோயில்களில் வருண பூஜை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க, மறுபக்கம் தமிழகம் முழுக்க திமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இரண்டுமே ஒரே நாளில் நடந்து முடிந்து போயிற்று.

முதல்வர்
இந்த சமயத்தில்தான், தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அறிவித்தார். எடப்பாடியார் இப்படி சொன்ன உடனேயே, துரைமுருகனிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்தால் வேலூர் மாவட்டம் முழுக்க போராட்டம் வெடிக்கும்'' என்று எச்சரித்தார்.

ஜோலார்பேட்டை
துரைமுருகனின் இந்த பேச்சு பல்வேறு கருத்துக்களுடன் வலம் வந்ததுடன், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லும் பணிகளுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. ஆனால் எங்களுக்கு 10 நாட்களாக தண்ணீர் இல்லை என்று ஜோலார்பேட்டை மக்கள் குடத்துடன் ஆங்காங்கே மறியலில் உட்கார்ந்து விட்டனர்.

காலி குடங்கள்
"கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகள் மூலம் சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் வழி திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு தண்ணீர் முறையாக திறந்து விடப்படவில்லை. ஏற்கனவே 10 நாட்களாக தண்ணீர் முறையாக விநியோகிக்கவும் இல்லை" என்று சொல்லி காலி குடங்களுடன் மறியல் நடத்தி வருகிறார்கள்.

போராட்டம்
இதை தவிர, ஜோலார்பேட்டையில் உள்ள 3வது வார்டில் கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கேட்டபோது அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லையாம். அதனால் இவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

எச்சரித்தார்
தங்கள் மாவட்டத்திலேயே குடிநீர் பிரச்சனையை முன்கூட்டியே அறிந்துதான் துரைமுருகன் அன்று எச்சரித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் தண்ணீர் எடுக்கும் சோதனை ஓட்டத்துக்கு நடுவே பொதுமக்களின் மறியல் ஜோலார்பேட்டையில் நடந்து வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications