ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்ட தண்ணீர் எங்கே சப்ளை செய்யப்படுகிறது தெரியுமா?
சென்னை: சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து கல் குவாரிகளையும், விவசாய கிணறுகளையும் கூட விட்டு வைக்காமல், அங்கேயிருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது.
தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னையில் சப்ளை செய்யப்பட்டபோதிலும், அது மக்கலுக்கு போதுமானதாக இல்லை.
எனவேதான், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி நீரை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

ரயில் தண்ணீர்
நேற்று முன்தினம் காலை 50 டேங்கர்களில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் நிரப்பி ரயிலில் அவை சென்னைக்கு வந்தன. நேற்று காலை இரண்டாவது முறையாக ரயிலில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

வட சென்னை
கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது. இதன்பிறகு, பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், கொளத்தூர், கொரட்டூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ரயில் மூலம் கொண்டு வந்த தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரயில் நடைமுறை
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தினமும் 4 ட்ரிப் வீதம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் கொண்டு வர முடியும் சூழ்நிலை உள்ளது.

குடிநீர் டேங்கர்கள்
"கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தேவையான மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் டேங்கர்களின் விநியோகத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம். இப்போது சென்னை நகரம் முழுக்க டேங்கர்கள் தினமும் 12,000 ட்ரிப் செல்கின்றன. அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், "என்று நீர்வளத்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications