உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் "முதல்" டுவீட்!
Recommended Video
சென்னை: உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது என எம்பி ஜோதிமணி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைபடி 8-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும். இதற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் "இந்தி" என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவர் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கரூர் எம்பியான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகமக்கள் என்ன படிக்கவேண்டும் என்பதை தமிழக மக்களாகிய நாங்கள் முடிவுசெய்துகொள்கிறோம். எந்த ஒரு மொழியையும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்க நினைத்தால் தமிழகம் அதை போர்க்குணத்தோடு எதிர்க்கும். உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒருபோதும் செல்லுபடியாகாது.#StopHindiImposition
— Jothimani (@jothims) June 1, 2019
இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணி கூறுகையில் தமிழக மக்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களாகிய நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். எந்த ஒரு மொழியையும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்க நினைத்தால் தமிழகம் அதை போர்க் குணத்தோடு எதிர்க்கும். உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒருபோதும் செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளார்.
கரூர் எம்பியான பிறகு சமூக பிரச்சினைக்காக போடப்பட்டுள்ள ஜோதிமணியின் முதல் டுவீட் இது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பொதுவான விஷயங்களையும் வாழ்த்து செய்திகளையும் வெளியிட்டு வந்தார் ஜோதிமணி.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications