உண்மையை வெளிகொண்டுவர நேர்மையும் முக்கியம்! நரசிம்ம கடவுளின் கதையை சுட்டிக்காட்டி நீதிபதி அட்வைஸ்
சென்னை: வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையாகவும் அர்பணியுடனும் செயல்பட வேண்டுமென சிங்க முக நரசிம்ம கடவுளின் கதையை சுட்டிக்காட்டி நீதிபதி எஸ் எஸ் சுந்தர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் சட்டத்துறை மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் இணைந்து நடத்தும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 3 நாட்கள் நடைபெறும் பயிலரங்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எஸ் சுந்தர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கரன், சட்டக் கல்வி இயக்குனக இயக்குனர் பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எஸ் சுந்தர், வழக்காடுவது என்பது ஒரு கலை என்றும் அதை அனைத்து இளம் வழக்கறிஞர்களும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார்.
வழக்கறிஞராக தான் பணியை தொடங்கிய போது, ஆங்கிலத்தில் நீதிமன்றத்தில் பேச தயங்கமும் அச்சமும் இருந்தாகவும், ஆனால் தற்போது அதையெல்லாம் சரி செய்ததால், தற்போது நீதிபதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், கூர்ந்து கவனிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை நீதிமன்றத்தில் நடத்தும் முன், வழக்குகளை எளிமையாக விளக்க அதை கதை போல் சொல்லும் திறமையை வளர்க்கவும், தெளிவான வாதத்தை வைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகளின் கேள்விக்கு உகந்த பதில்களை வழங்கினாலே வழக்கில் விரைந்து தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.
நீதி மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வழக்கறிஞர் வழக்குகளில் நேர்மையுடன், வெளிப்படை தன்மையுடனும் உண்மைகளை தேட வேண்டும் என குறிப்பிட்ட அவர், வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள், நேர்மையாகவும் அர்பணிப்புடன் செயல்பட வேண்டுமென சிங்க முக நரசிம்ம கடவுளின் கதையை சுட்டிக்காட்டினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications