"ஒரு கோரிக்கையை கூட ஏற்கல.." நாளை முதல் பேருந்துகள் ஓடாது.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்
சென்னை: இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், நாளை முதல் காலவரையற்ற போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. அதில் 23 தொழிற்சங்கத்தினர் இணைந்து வேலைநிறுத்த போராட்டம் குறித்து அறிவித்து இருந்தனர்.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி என ஆறு முக்கிய கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
சிஐடியூ தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 23 தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தன. பொதுவாகப் பொங்கல் காலகட்டத்தில் பலரும் பேருந்துகளைப் பயன்படுத்தியே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள். நீண்ட வார விடுமுறை என்பதால் இந்த காலகட்டத்தில் பேருந்து சேவை ரொம்பவே முக்கியம்.
இந்த நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் பொங்கல் விழாவுக்குப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியுமா என்பதிலேயே கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.
உடன்பாடு இல்லை என்பதால் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அடுத்த வாரம் பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடுதல் நிதி செலவாகும் என்பதால் நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் இன்றைய தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொழிலாளர் நல ஆணையம் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமுக முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடு, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக இருந்தது.
இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆறு கோரிக்கைகளில் இருந்து ஒரு கோரிக்கைக்கு வந்ததாகவும் அப்போதும் தமிழக அரசு ஏற்கவில்லை என்பதால் வேறு வழியின்றி வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications