“விஜய் ஒரே ஒரு கையெழுத்து போட்டா போதும்.. எல்லாரும் போட்டி போட்டு வருவாங்க”.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு
சென்னை: "எங்க தலைவர் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டா போதும், எல்லாரும் போட்டி போட்டு படத்தை வாங்குவாங்க" என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடலூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். மேலும், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் கலந்துகொண்டார்.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தலைவர் விஜய்க்கு பிடித்த மாவட்டம் கடலூர். தானே புயல், சுனாமி வந்த போது மக்களுக்கு உதவி செய்தார். கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக சேவை செய்து வருகிறோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார். எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உச்சத்தில் இருக்கும் போதே அதை விட்டுவிட்டு வந்தவர். ஓய்வு பெற்று, படம் ஓடாமல் அவர் அரசியலுக்கு வரவில்லை.
விஜய் அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பட உரிமை விற்றுவிடும். நான், நீ என போட்டி போட்டு போட்டுக்கொண்டு படத்தை வாங்குவார்கள். அந்த உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்காக சேவை செய்ய வந்த தலைவர் தான் விஜய்.
உண்மையான தொண்டர்கள் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான். நம்மிடம் காசு பணம் இல்லை, ஆனால் உண்மையான உழைப்பு இருக்கிறது. நான் ஊழல் செய்யமாட்டேன், என்னுடன் இருப்பவர்கள் யாரும் ஊழல் செய்யமாட்டார்கள் எனச் சொன்ன ஒரே தலைவர் விஜய் தான்.
திமுக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மக்கள் வரிப்பணத்தில்தான் செய்தீர்கள். அதுவும் சரியாக செய்யாமல் கையாளாகாத அரசாக திமுக அரசு இருக்கிறது. நீங்கள் எப்படி வேஷம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஒரே தளபதி, தலைவர் விஜய்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளும் தவெக கோட்டையாக இருக்கும்.
தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக இருக்கும். ஆனால் திமுக 5 ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்யவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், விசில் சின்னத்தை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்." எனப் பேசியுள்ளார்.
-
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?











Click it and Unblock the Notifications