ரெய்டையே மூடி மறைச்சிட்டீங்களே? EDயும் சொல்லல.. பாஜகவும் மறுக்கல.. என்ன நடந்தது? சிபிஐஎம் கேள்வி!
சென்னை: பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டது பற்றி சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ரெய்டு மூடி மறைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செப்டம்பர் 17ஆம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.

பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் ED ரெய்டு: தென்சென்னை பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு இந்த சோதனை எதற்காக நடைபெற்றது என்றோ, என்ன கைப்பற்றப்பட்டது என்றோ ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து சிபிஐம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று பாஜக மாநில தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றுள்ளது. இந்த சோதனைகள் பற்றி அமலாக்கத்துறையோ, பாஜகவோ இதுவரையிலும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. இது அமலாக்கத்துறையின் மீது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.
சாதாரணமாக அமலாக்கத்துறையின் சோதனைகள் அதன் தொடர்பான விபரங்கள் பெரிய அளவில் பேசப்படுவது வழக்கமான உள்ள நிலையில் இந்த சோதனை மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இது கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறது. எனவே, அமலாக்கத்துறையும், பாஜகவும் பொதுமக்களுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
கே.பாலகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்: 1. பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் 5 மணி நேரம் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
2. அமலாக்கத்துறையின் சோதனையின் போது பாஜகவின் தென்சென்னை மாவட்ட தலைவர்கள் மிக சாதாரணமாக சோதனை நடக்கும் இடத்திற்கு வருவதும், வெளியே வந்து தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டது எப்படி?
3. பாஜக நிர்வாகிகள் மேலிடத்தில் தொடர்பு கொண்டு இந்த சோதனையை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதால் அமலாக்கத்துறை நிறுத்தி விட்டதாக சொல்வது உண்மையா?
4. தவறாக ஒரு சோதனை நடத்தப்பட்டிருந்தால் பாஜக தரப்பிலிருந்து கண்டனமோ, அமலாக்கத்துறையின் தரப்பிலிருந்து விளக்கமோ அளிக்கப்படாதது ஏன்?
மூடி மறைத்து: எனவே, அமலாக்கத்துறையும், பாரதிய ஜனதா கட்சியும் மேற்கண்ட அமலாக்கத்துறை சோதனை சம்பந்தமாக பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும். ஒரு தவறை கண்டுபிடிப்பதற்காக அமலாக்கத்துறை வந்திருந்தது என்றும் மேலிட தலையீடுகளின் காரணமாக அது நிறுத்தப்பட்டது என கருத வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்கட்சிகளை பழிவாங்கும் துறையாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதும், அதே சமயம் பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்வதில்லை என்ற கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதனை மேலும் உறுதிபடுத்தும் வகையிலேயே மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது என மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது. எனவே, உரிய விளக்கத்தை அமலாக்கத்துறை பொதுமக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications