ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதியா.. கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவியுங்கள்.. கே.எஸ்.அழகிரி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 7 பேரையும் விடுதலை செய்தது போல் கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுவிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 32 ஆண்டுகளாக தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் எழுவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக சட்டசபையில் எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் அவர்களை விடுதலை செய்வதற்கான அந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்படவே இல்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்களை விடுவிக்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

மசோதாக்கள்
ஆனாலும் ஆளுநர் அந்த மசோதாக்கள் மீது எந்த விதமான முடிவையும் எடுக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தை பேரறிவாளன் அணுகினார். அப்போது உச்சநீதிமன்றத்திற்கான 142 சட்டவிதி படி அவர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது போல் மசோதா மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரையும் நீதிமன்றம் கண்டித்தது.

விடுவிக்க வேண்டும்
இதன் அடிப்படையில் தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ததை பாஜகவும் தமிழக காங்கிரஸும் கடுமையாக எதிர்த்தது.

பேரறிவாளன்
கடந்த முறை பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதற்கே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் 7 பேரையும் உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் என கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்தும் கே எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

நேரு பிறந்தநாள்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி சென்னை கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு கேஎஸ் அழகிரி மாலை அணிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கோவை சிறையில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இஸ்லாமியர்கள்
அவர்களில் பலர் வழக்கு விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படாமலேயே சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்காதது ஏன், ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதி, இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு நியதியா. கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு என்றார்.
-
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications