தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்
சென்னை: தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசாக தமிழக அரசு உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கடும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் பிரச்சினையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு பகல் பாராமல் தண்ணீர் தேடி அலைகின்றனர்.
இந்த நிலையில் டேங்கர் லாரிகளும் வாரத்துக்கு ஒரு முறை, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்வதாகவும் அவ்வாறு செய்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான குடங்களே கிடைக்கின்றன. இதை வைத்து கொண்டு எப்படி ஒரு வாரம், 15 நாட்கள் என வாழ்க்கையை ஓட்ட முடியும் என மக்கள் கொந்தளிக்கின்றனர்.

பிரச்சினை இல்லை
ஆனால் தமிழக அரசோ தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கிறது. நேற்றைய தினம் ரிப்பன் மாளிகையில் அமைச்சர் எஸ்பி வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை ஏதும் இல்லை.

பாக்கு மட்டை
தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் எதுவும் மூடப்படவில்லை. ஹோட்டல்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

நடவடிக்கை
குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். தண்ணீர் பிரச்சினை உள்ளதாக சம்பந்தப்பட்ட ஐடி நிறுவனத்தினர் கூறினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என தெரிவித்திருந்தார்.

2 டிஎம்பி
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார். பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications