கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்' விருது.. ரூ.10 லட்சம் காசோலையை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை வழங்கவுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது கி.வீரமணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு "தகைசால் தமிழர் விருது' வழங்க தேர்வுக் குழுவினர் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை கி.வீரமணிக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வழங்க உள்ளார்.
இளம் வயதிலேயே பொது வாழ்வில் ஈடுபட்டு, சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர் கி.வீரமணி. 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராகப் பொறுப்பேற்று தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து விடுதலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் கி.வீரமணி.

உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணையதளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றியவரும் திராவிடர் கழகத் தலைவருமான முனைவர் கி.வீரமணிக்கு 2023ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருது முதுபெரும் பொதுவுடமை இயக்கத் தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.
-
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி!












Click it and Unblock the Notifications