தமிழகத்தில் உருவான புதிய கட்சி.. காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தொடங்கினார்.. பெயர் இதுதான்
சென்னை: பாமகவின் மூத்த தலைவராக செயல்பட்ட மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ‛ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில் அவர் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியின் தொடக்க விழா வரும் ஜனவரி 9 ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பாமகவில் முக்கிய தலைவராக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. இவர் மாநில வன்னியர் சங்க தலைவராக இருந்தார். பாமகவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு 2 முறை எம்எல்ஏவாக இருந்தார்.

கடந்த 2001ல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சட்டசபை தொகுதியிலும், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியிலும் போட்டியிட்டு பாமகவில் எம்எல்ஏவாக செயல்பட்டு வந்தார். இவர் 2018ல் உடல்நலக்குறைவால் காலமானார்.
காடுவெட்டி குருவிற்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் பெயர் கனல் அரசன். மகள் பெயர் விருதாம்பிகை. இந்நிலையில் தான் விருதாம்பிகை அவ்வப்போது பாமகவை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
இதுதொடர்பாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை இன்று சென்னையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ‛நாங்கள் புதிய கட்சியை தொடங்கி உள்ளோம். இந்த கட்சியின் பெயர் ‛ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி'. இந்த கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து வந்துள்ளோம். கட்சியின் தொடக்க விழாவை ஜனவரி 9 ம்தேதி சேலத்தில் நடத்த உள்ளோம்.
கட்சியின் கொள்கை என்னவென்றால் சமூகநீதி.. அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான சரியான சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த கட்சி உருவாக்கி உள்ளோம். சமுதாய நீதி என்ற அடிப்படையில் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதில் எங்கள் அப்பா கடைசி வரை உறுதியாக இருந்தார். ராமதாஸ் அவ்வளவு பாடுபட்டார்.
தனது மகன் (அன்புமணி ராமதாஸ்) மீதான பாசத்தினால் அந்த கொள்கையில் இருந்து ராமதாஸ் வெளியே வந்துவிட்டார். ஆனால் எங்கள் அப்பா அந்த கட்சிக்காக கடைசி வரை உண்மையாக இருந்தார். வன்னியர் சமுதாய மக்களுக்காக உண்மையாக இருந்தார். எந்தவொரு மகனுக்காக இந்த சமுதாயத்தை பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றாரோ அந்த மகனே ராமதாஸை இவ்வளவு தூரம் எதிர்ப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.
எங்களுக்குள் மாற்று கருத்துகள் இருக்கலாம். ராமதாஸை நாங்கள் விமர்சிக்கலாம். ஆனால் மகனுக்காக கட்சியை அர்ப்பணித்த தந்தை ராமதாை அவர் இழிவாக பேசுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் வன்னியர்களுக்கு எதிரானதாகவே உள்ளது. அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ் சண்டையிட்டு சமுதாய மக்களை கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். தமிழ்நாடு கட்சியாக இருந்த பாமக இப்போது தந்தை - மகன் கட்சியாக உள்ளது'' என விமர்சனம் செய்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications