இப்படியெல்லாம் பணம் சம்பாதித்து என்ன செய்ய போறீங்க?.. பயில்வான் ரங்கநாதனை கிழித்த கலா மாஸ்டர்
சென்னை: பிரபலங்களை அதிலும் குறிப்பாக நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை டான்ஸ் மாஸ்டர் கலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
காமெடி, வில்லன் வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மகிழ்வித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமா பத்திரிகையாளராகவும் உள்ளார்.
இவர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு சினிமா குறித்து பேசி வருகிறார். அதில் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி மிகவும் அவதூறாக பேசி வருகிறார். ஒரு முறை ராதிகாவின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.
என்ன வச்சு ரேகாநாயர் விளம்பரம் தேடுறாங்க! 'யூட்யூப்’ சேனலின் சதி! சட்டப்படி சந்திப்பேன் - பயில்வான்!
ராதிகா
இதனால் கொந்தளிப்பில் இருந்த ராதிகா, ஒரு நாள் திடீரென திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதனை நேருக்கு நேர் எதேச்சையாக சந்தித்துவிட்டார். உடனே பயில்வானை பொது இடம் என்றும் பாராமல் ராதிகா வெளுத்து வாங்கினார். இதே போல் பயில்வான் ரங்கநாதன், பாடகி சுசித்ராவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
சுசித்ரா
உடனே சுசித்ரா, பயில்வானை போன் போட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசி வரும் பயில்வானை கைது செய்ய வேண்டும் என சுசித்ரா புகார் கொடுத்துள்ளார். இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயரையும் பயில்வான் மிகவும் மோசமான வார்த்தைகளை கொண்டு விமர்சித்தார்.
திருவான்மியூர் பீச்
இதையடுத்து திருவான்மியூர் கடற்கரையில் பயில்வானை நேருக்கு நேர் சந்தித்த ரேகா நாயர், "நான் எப்படி வேணாலும் நடிப்பேன். அதை கேட்க நீ யாரு, என் அப்பனா, புருஷனா என கேட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரேகா நாயர் , செருப்பு பிஞ்சிடும் என பயில்வானை திட்டினார்.
மீனாவின் கணவர்
அது போல் நடிகர் மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பால் அண்மையில் இறந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசியது அனைவரையும் கோபத்துக்குள்ளாக்கியது. இந்த நிலையில்தான் பயில்வானை கலா மாஸ்டர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கலா மாஸ்டர்
அவர் கூறுகையில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி விமர்சனம் செய்வது தவறில்லை. அது போல் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்றாலும் அதைக் கேட்பதும் தவறு கிடையாது. ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது தவறு.
வியூஸ் கிடைக்கிறதா?
இவ்வாறு ஒருவரை காயப்படுத்தி பேசுவதால என்ன சந்தோஷம் கிடைக்க போகிறது. நான் அது போல் யாரையும் பேச மாட்டேன். அது போல் பேசுபவர்களின் யூடியூப் வீடியோக்களையும் பார்க்க மாட்டேன். அப்படி பேசுபவர்களை பார்த்தால் எனக்கு கோபம்தான் வரும். நீங்களே போடும் வீடியோக்களுக்கு நிறைய வியூஸ் வருவதால் அதிக பணம் கிடைக்கிறதா? மற்றவர்களை கஷ்டப்படுத்தி அதில் வரும் காசை வைத்து என்னதான் செய்ய போறீங்களோ என கலா மாஸ்டர் கடுமையாக விமர்சித்துள்ளார்.