வங்கி கணக்கில் ரூ.1 வந்துடுச்சா? உங்களுக்கு ரூபாய் 1000 கன்பார்ம்.. மகளிர் உரிமைத்தொகை மேஜர் அப்டேட்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட உள்ளது. புதிய பயனாளிகளின் வங்கி கணக்கில் முதலில் ரூபாய் 1 அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிச.15 முதல் ரூ,1,000 வழங்கப்பட உள்ளது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 1 அனுப்பி, கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என சோதிக்கப்படும். உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த உங்களுக்கு வங்கி கணக்கில் 1 ரூபாய் வந்திருந்தால் உங்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற தகவலை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார். இதனால், உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உரிமைத்தொகை திட்டத்திற்கு இறுதி செய்யப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் அவர்களின் வங்கி கணக்குக்கு 1 ரூபாய் அனுப்பப்படும். கடந்த முறையும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பெண் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு முதலில் 1 ரூபாய் அனுப்பப்பட்டது.
அப்படி யாருக்கெல்லாம் இந்த ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்திருக்கிறதோ அவர்கள் எல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என பெண்கள் அறிந்து கொள்ளலாம். தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 1 அனுப்பி, கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என சோதிக்கப்பட்டு வருகிறது.
உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த உங்களுக்கு வங்கி கணக்கில் 1 ரூபாய் வந்திருந்தால் உங்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும். இந்த வாரம் முழுக்க இந்தப் பணிகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்












Click it and Unblock the Notifications