பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லையில் மீன்பிடிப்பது என்ன நீதி?.. கமல் கேள்வி
சென்னை: பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லையில் மீன்பிடிப்பது எந்த வகை நீதி என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
ஊரடங்கு உத்தரவால் மீன்பிடித் தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 20-ஆம் தேதி முதல் மீன் விற்பனை, மீன்பிடி சார்ந்த தொழில்களுக்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு அறிவித்தது.

பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனவிருத்திக்காக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த நேரங்களில் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். மோட்டார் படகுகளும் இயக்கக் கூடாது என்பது விதியாகும்.

ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவால் இரு மாதங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள், தற்போது மேலும் இரு மாதம் பிழைப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நமது கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்கள் மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications