Neet: இன்றைய தலைமுறையை அலட்சியப்படுத்துவதே தவறு.. இதில் நாளை ஆளப்போகும் மாணவர்களையுமா?.. கமல்
சென்னை: இன்றைய தலைமுறையை அலட்சியப்படுத்துவதே தவறு. இதில் நாளை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல் நீட் தேர்வு குறித்து முடிவு எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நடத்துவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பல்வேறஉ எதிர்க்கட்சியினரும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக அரசும் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப்படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு.

நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications