புதுவை சட்டசபை தேர்தலுக்காக வெயிட்டிங்.. கமல்ஹாசன் அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுவை சட்டசபை தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் புதுவை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கமல் பேசுகையில் புதுவை சட்டசபை தேர்தலுக்காக காத்து கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் நன்மைக்காக எப்படியெல்லாம் செயல்பட முடியுமோ அதனை செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல அரசை ஏற்றி வைத்தால் கணக்கிலடங்காத நலன்களை செய்ய முடியும்.
திருடனை திருடன் என்றால்தான் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம் தெரியும். ராமர் கோயில் விவகாரத்தில் நல்லுறவு பேணுவதே நல்லது. அனைத்து போராட்டங்களிலும் அரசின் அணுகுமுறை சரியாக இல்லை. மக்கள் நீதி மய்யத்தின் எண்ணிக்கை 10 லட்சத்தை முன்பே தாண்டிவிட்டது என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications