பெற்றோர் போட்டோ.. தலைமீது கை வைத்து அண்ணி ஆசி.. சொன்ன "அட்வைஸ்!" அப்படியே நெகிழ்ந்து போன கமல்ஹாசன்
சென்னை: தாய் தந்தையர் புகைப் படத்துக்கு முன்பாக வேட்புமனுவை வைத்து ஆசீர்வாதம் பெற்றதோடு, தாய்க்கு நிகராக, தான் மதிக்கும், அண்ணியிடமும் ஆசி வாங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்.
இந்த சட்டசபை தேர்தலில், முதன்முறையாக போட்டியிடுகிறார் கமல்ஹாசன். கோவை தெற்கு தொகுதியில் அவர் களமிறங்குகிறார்.
இதையொட்டி அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குழந்தையாக மாறிய கமல்
என்ன தான் அரசியலில்.. பிற கட்சிகளை அடித்து துவைத்து காயப்போட்டு ஆவேசமாக உரையாற்றினாலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தான் இன்னமும் ஒரு குழந்தைதான் என்பதைப் போல கமல்ஹாசனின் செயல்பாடுகள் இருந்தன. ஆம்.. அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, தனது வீட்டிலும் அங்கே உள்ள அலுவலகத்திலும் என்னவெல்லாம் நடந்தது என்பதை ட்விட்டர் பதிவு வாயிலாக வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

வேர்களின் ஆழம்
பொருத்தமான ஒரு கேப்ஷன் அதற்கு கொடுத்துள்ளார். கிளைகளின் உயரம் ஊர் அறியும். வேர்களின் ஆழம் யார் அறிவார்?! குடும்பத்தைக் கொண்டாடுங்கள். உலகம் உங்களைக் கொண்டாடும். இவ்வாறு அவர் அதில் கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த எழுத்துக்களுக்கு தக்கபடி தான் அவரது செயல்பாடும் இருந்தது.

யார், யார்
கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா, தனது அண்ணன் சாருஹாசனின் மனைவி, சாருஹாசன் மகள் சுஹாசினி மற்றும் பல உறவினர்கள் அப்போது வந்திருந்தனர். முதலில் தாய், தந்தை படத்திற்கு முன்பாக வேட்புமனுவை வைத்து மரியாதை செய்தார், கமல்ஹாசன்.

அண்ணியிடம் ஆசி
இதையடுத்து தனது அண்ணியிடம் ஆசி பெற்றார். அவர் புகைப்படத்திலுள்ள தனது மாமனார்-மாமியார் போட்டோவை கும்பிட்டுவிட்டு, அப்படியே, கையை கமல்ஹாசன் தலைமீது வைத்து ஆசி கூறினார். அதை பவ்யமாக மரியாதையோடு ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன்.
அப்போது கமலஹாசன் அண்ணி சில அட்வைஸ் கொடுத்தார். "போகும் வழி சிரமம்தான். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையல்ல. ஆனா, உன் அப்பா வழியில் போகிறாய். கண்டிப்பாக உனக்கு வெற்றிகிடைக்கும்" என்று ஆசீர்வதித்தார் அண்ணியார்.

நெகிழ்ந்த கமல்ஹாசன்
கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சந்திராஹசனும் அவரது மனைவியும் மறைந்துவிட்டனர். இப்போது தாய்-தந்தை ஸ்தானத்தில் இருப்பது சாருஹாசனும் அவர் மனைவியும்தான். இந்த நிலையில்தான், தாய் தந்தை புகைப்படத்தின் முன்பாகவும், அண்ணியிடமும் ஆசி பெற்று, நெகிழ்ச்சியோடு, வேட்புமனு தாக்கல் செய்ய கிளம்பினார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications