பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 39 மக்களைவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Kamal Haasan should avoid saying separatist views, Tamilisai Request

முன்னதாக, மத்தியில் பாஜகவுக்கு இடங்கள் கூடுமே தவிர, குறையாது என்று பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் என்றார்.

கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் என்றும் கூறினார். இதே போல், மத அடையாளத்தை பிரதமர் மோடி பயன்படுத்தியதாக கூறிய முன்னாள் மத்தியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பதலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த தமிழிசை,

பெயில் வாங்கி வெள்ளி விழா முடிந்து நீங்கள் சரணடைவது எப்போது? தேர்தல் நேரம் வந்தால் மட்டும் கோயில் யாத்திரை செல்லும் ராகுல் பிரியங்கா? தேர்தல் முடிந்ததும் திகார்? பயமா?பசி?பதவிப்பசி?பரிதவிப்பா?? என்று கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+