லாக்டவுன் நீட்டிப்பு:எஜமானரின் உத்தரவு குரலுக்காக காத்திருக்கிறீர்களா? எடப்பாடிக்கு கமல்ஹாசன் கேள்வி
சென்னை: லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக எஜமானரின் உத்தரவு குரலுக்காக காத்திருக்கிறீர்களா? என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று ஒடிஷா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ மத்திய அரசு இது தொடர்பாக அறிவிக்கட்டும் என கூறியிருந்தார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், லாக்டவுன் நீட்டிப்பு குறித்து பிற மாநில முதல்வர்கள் அறிவித்துவிட்டனர்; நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் என் மாண்புமிகு முதல்வர் அவர்களே?

உங்களது எஜமானரின் உத்தரவு குரலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? என்னுடைய குரல் மக்களிடம் இருந்து மக்களுக்காக வருகிறது என கூறியுள்ளார். மேலும், அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள் எனவும் சாடியுள்ளார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications