திமுக என்பது உணர்வு.. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கையும் அதுதான்.. கமல்ஹாசன் பேச்சு!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை என்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிந்தனையை திமுக செயல்படுத்தியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான் என்று கூறிய கமல்ஹாசன், திமுக என்பது ஒரு உணர்வு என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுகவினர், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலும் கலந்து கொண்டார்.

அப்போது கமல்ஹாசன் பேசுகையில், திடீரென அரசியலுக்கு இக்கட்டுக்காகவோ, சூழலுக்காகவோ நான் திமுகவுடன் சேரவில்லை. எங்கள் கொள்கைகள் ஒரே மாதிரியானது. நாங்கள் சொன்ன சிந்தனையான மகளிர் உரிமைத் தொகை கையில் எடுத்துக் கொண்டு திமுக செயல்படுத்தியது. இவர்களோடு சேர்வதா? அல்லது நாம் யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா?
பெரிய சிந்தனை, அரசியல் அறிவு அவர்களுக்கு இருப்பதாக நினைத்து கொண்டும், நமக்கு இல்லாதது போலவும் கவலை கொள்ள கூடாது. வடநாட்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தால் யார் நிர்வாகிகள் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக ஓடியவர்கள் அயர்ந்து அமர்ந்த இடம் தான் இந்த பகுதி.. 13 ஆண்டுகள் ஓடினார்கள் என்று சொல்வார்கள்.
13 ஆண்டுகள் ஓடினாலும், அதில் எங்களுக்கு வெற்றியே இல்லை என்று சொல்ல முடியாது. 5 முறை முதல்வராகி இருக்கிறார் கருணாநிதி.. 13 ஆண்டுகள் ஓய்வு கொடுத்தது சரிதான்.. அந்த ஓய்வு கூட எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் ஓய்வு கொடுக்கவில்லை என்றால், அவ்வளவு நீண்ட காலம் கருணாநிதி வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி..
அதேபோல் கருணாநிதியின் பேரனும் வெகு நாள் வாழ்ந்து திமுக என்ற அமைப்புக்கு நன்மை செய்ய வேண்டும். திமுக என்பது ஒரு உணர்வு.. சரியான ஆட்கள், சரியான நேரத்தில் வந்தார்கள்.. என்னுடைய வயது என்னவோ, அதுதான் திமுக பற்றிய என்னுடைய புரிதல்.. நான் திறந்த போது பார்த்த சூரியன் இதுதான்.. இருட்டை பார்த்து பயப்பட கூடாது.. ஏனென்றால் விடியல் வரும்.. உதயநிதியும் வருவார் என்று தெரிவித்துள்ளார்.
-
நான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறினால் நெருப்பில் குதித்து சாவேன்.. துரைமுருகன் ஆவேசம் -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை!











Click it and Unblock the Notifications