நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் குறைந்த வாக்குகள்.. மாற்றங்கள் கடுமையாக இருக்கும்.. கமல் வார்னிங்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடக்கவுள்ள மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என நிர்வாகிகளை கமல் எச்சரித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலில் சரத்குமார் மற்றும் ஐஜேகே கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட்டது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 133 தொகுதிகளில் போட்டியிட்டது மக்கள் நீதி மய்யம். இதில் ஒரு தொகுதியில் கூட இக்கட்சி வெல்லவில்லை. தமிழகத்தில் 5ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

வாக்கு சதவீதம்
இந்த தேர்தலில் இக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 2.45 ஆகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதாவது கட்சித் தொடங்கிய ஓராண்டில் போட்டியிட்ட அக்கட்சி 5 தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் 3.71 சதவீதம் வாக்குகளை பெற்றது.

குறைந்த வாக்கு சதவீதம்
கடந்த சட்டசபைத் தேர்தலில் கடந்த முறையைக் காட்டிலும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றும் அக்கட்சியை சேர்ந்த ஓரிருவர் சட்டசபைக்கு செல்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் 1.26 சதவீதம் குறைந்த வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது.

பணியாற்றவில்லை
இதற்கு காரணம் அனைத்து நிர்வாகிகளும் கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் அதிக கவனம் செலுத்தியது காரணமாக இந்த தோல்வி என சொல்லப்படுகிறது. மேலும் பலர் கட்சி பணியாற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

கமல் எச்சரிக்கை
சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் உடனடியாக கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் வரும். அது கடுமையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications