சமூகநீதித்தலைவர்! மொழி வளர்த்த தமிழாளர்! பிறந்தநாளில் மாஜி முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்ந்த கமல்
சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்தநாளையொட்டி, ‛‛ எளிமையில் இருந்து உயர்வுக்கு செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூக நீதித்தலைவர், மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்'' என மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திமுகவின் நீண்டகால தலைவராக இருந்த இவர் 5 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். 2018 ஆகஸ்ட் 7 ம் தேதி வயது மூப்பின் காரணமாக மறைந்தார். தமிழகத்தின் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது.

இந்நிலையில் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் முதல் முறையாக அரசு சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் திமுகவின் உற்சாகமடைந்துள்ளனர்.
கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கருணாநிதியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛எளிமையில் இருந்து உயர்வுக்கு செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications