காமராஜர் 118வது பிறந்தநாள் - அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை - விருதுநகரில் எளிமையாக கொண்டாட்டம்
பெருந்தலைவர் காமராஜரின் 118 பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் மாலை அணிவித்து அரசு
சென்னை: கல்விக்கண் திறந்த காமராஜரின் 118ஆவது பிறந்த நாள் விழா தமிழக அரசின் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் காமராஜர் உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெருந்தலைவர் 118வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை நிறுத்துமாறு எந்தச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. சுற்றறிக்கை வெளியிடப்படாமலேயே எப்படி நகைக்கடன் நிறுத்தம் பற்றிய தகவல் வெளியானது எனத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்த தினத்தன்று ஆண்டுதோறும் விருதுநகரில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் முழுவதும் திருவிழா போல் கூட்டம் காட்சியளிக்கும். பள்ளி கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்பினர், கட்சியினர் பாகுபாடின்றி அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தமிழகம் அறிவித்த ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரது பிறந்த நாள் விழா எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக கொண்டாடப்பட்டது. விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதை அடுத்து காமராஜர் நினைவிடத்தில் உள்ள அவரது புகைப்படங்களை பார்வையிட்டார். கொரோனோ பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொது மக்கள் கூட்டமாக வர தடை விதிக்கப்பட்டு உள்ளது நான்கு நான்கு நபர்களாக காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications