மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார்- கனிமொழி
சென்னை: மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார் என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வேலு , தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

10 ஆயிரம் பேருக்கு
கொடியசைத்து உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை துவக்கி வைத்தார். அந்த அறக்கட்டளையின் சார்பில் 10,000 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் மழைநீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை
சென்னையில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் இருப்பது என்பது நீண்ட கால போராட்டமாகவே உள்ளது. இதற்கான நிரந்தர முடிவுகள் விரைவில் எடுக்கப்படும். நீர் வழி பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு காரணம். கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.

முதல்வரின் தொகுதி
நிச்சயமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். முதல்வரின் தொகுதியிலேயே குறை இருப்பதாக கூறிய அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பிய போது, மழைக் காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி
அதிமுக ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதி என்னவானது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேங்கிய மழை நீரை அகற்ற திமுக கட்சி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications