கலைஞர் 100 வினாடி வினா! அறிவுத் திருவிழா நடத்தும் கனிமொழி! பதில் சொல்லுங்க லட்சங்களை அள்ளுங்க!
சென்னை: ரூ.35 லட்சத்துக்கு மேல் ரொக்கத் தொகையை பரிசளித்து ''கலைஞர் 100 வினாடி வினா'' எனும் அறிவுத் திருவிழாவை நடத்துகிறார் கனிமொழி எம்.பி. இது குறித்து கனிமொழி எம்.பி. அலுவலகம் விடுத்துள்ள விவரம் வருமாறு;
கலைஞர் 100 வினாடி வினா: திமுக மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டி, கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் வழிநடத்திய அறிவுப் புரட்சியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்வதே இந்த வினாடி வினாவின் முதன்மை நோக்கமாகும்.
இந்த வினாடி வினா இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது:
●18 வயதுக்குட்பட்ட பிரிவு
●18 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (பொதுப் பிரிவு)
வினாடி வினா சுற்றுகள்:
1.முதல் சுற்று - இணையவழி வினாடி வினா
2.இரண்டாவது சுற்று - மண்டல போட்டி
3.மூன்றாவது சுற்று - அரையிறுதி & இறுதிப் போட்டி
முதல் சுற்று இணையவழி வினாடி வினா செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கி அக்டோபர் 25, 2023 வரை நடைபெறுகிறது.
வினாடி வினா இணையதளம் - www.kalaignar100.co.in

இணையவழி சுற்று: இணையவழி வினாடி வினாவின் குறிக்கோள் மாவட்டத்தில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறுவதாகும். மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
பங்கேற்பாளர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் மற்றும் பிற அடிப்படை விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவும் 3 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
ஒருவர் 'Take Quiz' என்பதைக் கிளிக் செய்தால், 100 வினாடிகளுக்கு ஒரு காலக்கெடு இயங்கித் தொடங்கும். அந்த குறிப்பிட்ட முயற்சியில், 50 கேள்விகளுக்கு விடையளிக்க 100 வினாடிகள் கிடைக்கும். அனைத்து 50 கேள்விகளும் பலவினை தெரிவு வினாக்கள் (MCQs) ஆகும்.
சுற்றின் காலக்கெடு முடிவதற்குள் தங்கள் சிறந்த மதிப்பெண்ணை பெற ஒவ்வொரு குழுவிற்கும் மொத்தம் 100 முயற்சிகள் வழங்கப்படும்.

மண்டல சுற்று: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வினாடி வினா போட்டி நடத்தப்படும். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும். மண்டலத்தின் வெற்றியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
அரையிறுதி: மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
இறுதிப் போட்டி: அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 3 லட்சம். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்ற பரிசுகள் உள்ளன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்குவார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications