முதல்வரை செல்லக்குமார் சந்தித்தது ஏன்.. இதுக்காகத்தான்.. கராத்தேவின் அடுத்த குண்டு
சென்னை: கிரானைட் குற்ற வழக்கிலிருந்து காப்பாற்ற கெஞ்சி முதல்வரை சந்தித்துள்ளார் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
மரத்துமேலே ச்சும்மா தூங்கிட்டிருந்த சிறுத்தையை சொறிஞ்சுவிட்ட கதையாகிவிட்டது கராத்தே தியாகராஜனை, செல்லக்குமார் எம்.பி. விமர்சித்தது. பதிலுக்கு மனிதர் போட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார் தாறுமாறாக.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்தது கட்சித் தலைமை. இதற்கு எதிராக அப்படியொன்றும் ஆத்திரம் காட்டவில்லை கராத்தே. ஆனால், ஸ்டாலின் தான் தமிழக காங்கிரஸை வழி நடத்துவதாக இவர் கூறிய கருத்துக்கு, கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான செல்லக்குமார் 'தராதரம் இல்லாதவர் பேசிய பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.' என்று வன்மமாக கீறிவிட்டார்.
இது கராத்தே தியாகராஜனை அநியாயத்துக்கு ஆத்திரப்பட வைத்துள்ளது. செல்லக்குமாரை வெச்சு கிழித்து எடுத்துக் கொண்டிருக்கிறார். கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்தபோது பத்து கோடி ரூபாயை முறைகேடாக வசூல் பண்ணி அமுக்கிக் கொண்டுவிட்டார் என்று முதலில் ஒரு குண்டை தூக்கி அவர் மீது போட்ட கராத்தே, இப்போது அடுத்த ஏவுகணையை வீசியுள்ளார்.
அதில்....என்னையெல்லாம் பற்றிப் பேசுவதற்கு செல்லக்குமாருக்கு ஏதாவது அடிப்படை தகுதின்னு ஒண்ணு இருக்குதா? சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செல்லக்குமார் சந்தித்தார். ஏன்? என்று கேட்டதற்கு 'தொகுதி பிரச்னைக்காக' என்றார். ஆனால் உண்மை அதுயில்லை.
இவர் கிரானைட் தொழில் செய்து கொண்டிருக்கிறார். செல்லக்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் மலையை வெட்டியதாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி கெஞ்சியும், புதிய கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டியும்தான் இ.பி.எஸ்.ஸை செல்லக்குமார் சந்தித்தார்.
இதுதான் உண்மை. ஆனால் வெளியே நல்லவர் போல் நாடகமாடுகிறார். உண்மையிலேயே மக்களின் குடிதண்ணீர் பிரச்னைக்காக முதல்வரை சந்திக்கலாமென சொன்ன என்னை கே.எஸ்.அழகிரி அன்று தடுத்தார். காரணமாக 'ஸ்டாலின் கோபப்படுவார்' என்றார். ஆனால் இன்று செல்லக்குமார் என்ன ஸ்டாலினின் அனுமதி வாங்கிவிட்டா முதல்வரை சந்தித்தார்?
ஆக மிக பாரபட்சமாகத்தான் இந்த தலைமை என் விஷயத்தில் நடந்திருக்கிறது. பொறுங்கள் இன்னும் பல விஷயங்களை தோல் உரித்துக் காட்டுகிறேன்." என்று கமா போட்டிருக்கிறார்.
இன்னும் முடியலையா!
- ஜி.தாமிரா
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications