தமிழ்நாட்டின் கோரிக்கையை எப்போதுமே கர்நாடகா ஏற்றதில்லை.. துரும்பு கூட அசையாது.. துரைமுருகன் பேட்டி!
சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது, அதனால்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

அப்போது பேசிய துரைமுருகன், "காவிரியில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய்ந்து கூறுவதற்கு காவிரி ஒழுங்காற்று குழுவிற்கே அதிகாரம் உள்ளது. கடந்த 13ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தின் நபர்கள் ஆய்வு செய்து விட்டு 12,500 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தரலாம் என்று கூறினார்கள். அதன் பிறகு அடுத்த ஓரிரு நாட்களிலேயே 5000 கன அடி கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். காவிரி ஒழுங்காற்று குழு இரண்டு பேருக்கும் சமமாக செயல்படுகிறதா அல்லது கர்நாடகத்திற்கு ஆதரவுக்காக செயல்படுகிறதா என மத்திய அமைச்சரிடம் கேட்டுள்ளேன்.
மத்திய அரசு இதுகுறித்து விளக்கவில்லை என்றால் மத்திய அரசு எதற்கு, காவிரி ஒழுங்காற்று குழு எதற்கு? முதலில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது அதன் பிறகு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. காவிரி ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அதனால் தான் நீதிமன்றம் சென்றுள்ளோம்.
வழக்கறிஞர் நாளை நீதிமன்றத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார். இதுவரையில் கர்நாடகா தமிழ்நாட்டின் கோரிக்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டது இல்லை. எல்லா விஷயங்களுக்கும் முடியாது என்று தான் கூறியுள்ளார்கள். ஒவ்வொன்றிற்கும் போராடி தான் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
காவிரியின் நீண்ட வரலாற்றில் ஆரம்பம் முதல் நான் இருக்கிறேன். எதையும் ஒரு நாள் கூட ஒரு துரும்பு கூட நாம் கேட்டதற்கு அவர்கள் இதுவரை அசைந்து கொடுத்ததில்லை. நாம் பெற்றிருக்கும் உரிமை அனைத்தும் உச்ச நீதிமன்றம் கொடுத்த உரிமை தான். அதேபோல் கர்நாடகாவிலிருந்து காவிரி நீரையும் நாம் பெற்று விடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications