Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சித்தராமையா வேண்டியவர்தான்" கர்நாடகா எதிரி நாடு போல நடந்து கொள்கிறது.. துரைமுருகன் சுளீர் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு எதிரி நாடு போல நடந்து கொள்கிறது என்றும் கர்நாடகாவின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல எனவும் அமைச்சர் துரைமுருகன் விமர்சித்தார்.

காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை விடுவிக்காமல் கர்நாடகா தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது. காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

Karnataka is behaving like an enemy country on Cauvery issue: Duraimurugan

காவிரியில் நதி நீர் விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை வழங்கும்; இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிடும். ஆனால் இந்த உத்தரவை கர்நாடகா அரசு மதிக்காமல் சொற்ப அளவு நீரைத்தான் திறந்துவிட்டு வருகிறது. தற்போதும் காவிரியில் வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 3-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட இருக்கிறது. ஆனால், இந்த தண்ணீரையும் தமிழகத்திற்கு திறக்கமுடியாது என கர்நாடகா கூறி வருகிறது. இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகா எதிரி நாடு போல நடந்து கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒழுங்காற்று குழு ஒழுங்காக ஆற்றவில்லை..காரணம் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வலியுறுத்தினோம். அவர்கள் நாள் ஒன்றுக்கு 2,600 கன அடி நீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது போதாது என்பது எங்களின் நிலைபாடு. காவிரி மேலாண்மை ஆணையம் 3 ஆம் தேதி கூடும் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போக வேண்டும்.

Karnataka is behaving like an enemy country on Cauvery issue: Duraimurugan

கர்நாடகாவில் இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண் பிடித்தது இல்லை. எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு சலுகை கேட்கிறோம் என நினைக்கிறார்கள். அதுவும் அல்ல.. இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், அது விதித்த விதிப்படிதான் நாட்டு மக்கள் நடக்க வேண்டும். ஆனால், ஒரு அரசாங்கமே நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல..

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையை நான் பார்த்து இருக்கிறேன். 10 முதல்வர்களை பார்த்து இருக்கிறேன். சித்தராமையா எனக்கும் தலைவருக்கும் ரொம்ப வேண்டியவர்..நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் எனக்கு தெரிந்தவர்தான். ஆனால், இவர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+