பால் விலை- தமிழக பாஜக இன்று போராட்டம்- கர்நாடகா பாஜக அரசை பதற வைக்குது அதே பால் விலை பஞ்சாயத்து!
சென்னை: கர்நாடகாவில் நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ3 உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கர்நாடகா மாநில ஆளும் பாஜக அரசோ, இந்த பால் விலை உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும் வரும் 20-ந் தேதிக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு அண்மையில் அமலுக்கு வந்தது. ஆவின் நிறுவனத்தின் பிரீமியம் அல்லது ஆரஞ்சு பாக்கெட் பால், ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யவில்லை.

இன்று பாஜக போராட்டம்
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து 1,200 ஒன்றியங்களிலும் இன்று போராட்டம் நடத்துகிறது பாஜக. அதாவது தமிழகம் முழுவதும் பாஜக இன்று பால் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது.

கர்நாடகா நிலவரம்
இந்நிலையில்தான் கர்நாடகா பாஜக அரசை நேற்று தூங்கவிடாமல் செய்திருக்கிறது பால்விலை உயர்வு விவகாரம். கர்நாடகாவில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்பது உற்பத்தியாளர்களின் கோரிக்கை. ஆனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பால் விலை உயர்வை அமல்படுத்தி மக்களின் அதிருப்தியை சந்திக்க வேண்டாம் என கணக்குப் போட்டு தாமதித்தது ஆளும் பாஜக அரசு.

திடீர் விலை உயர்வு
ஆனால் கர்நாடகா பால் கூட்டமைப்பானது நேற்று திடீரென பால் விலை உயர்வை அறிவித்தது. இதன்படி நம்மூர் ஆவினைப் போன்ற கர்நாடகாவின் நந்தினி பால் விலை 1 லிட்டருக்கு ரூ3 உயர்த்தப்பட்டது. கர்நாடகாவில் நந்தினி 1 லிட்டர் பால் விலை ரூ37. இது ரூ40 ஆக உயர்ந்தது. கொழுப்பு நீக்கம் செய்யப்பட்ட பால் விலை ரூ38-ல் இருந்து ரூ41 ஆகவும் பசும்பால் விலை ரூ42-ல் இருந்து ரூ45 ஆகவும் உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் கர்நாடகா பால் கூட்டமைப்பு அறிவித்தது.

முதல்வர் பொம்மை
இதனால் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவை இந்த பால் விலை உயர்வு தந்துவிடும் என்பதால் உடனடியாக ஆலோசனை நடத்தினார் முதல்வர் பசவராஜ் பொம்மை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பால் விலை உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பால் கூட்டமைப்பினரிடம் கேட்டுள்ளோம். இது தொடர்பாக 20-ந் தேதிக்குப் பின்னர் முடிவெடுப்போம் என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடகா பால் கூட்டமைப்பினர் விலை உயர்வை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

என்ன செய்யும் தமிழக பாஜக?
தமிழகத்தில் இன்று பாஜகவினர் பால் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலத்தில் பால் விலை உயர்வு விவகாரம் ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழக அரசின் பால் விலை உயர்வுக்கு எதிரான பாஜகவின் போராட்டமும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications