ஆவினுக்கு உலை வைக்கும் கர்நாடகாவின் 'நந்தினி'.. தமிழ்நாட்டுக்குள் நுழைய ஜரூராக நடக்கும் பணிகள்!
சென்னை: ஆவினுக்கு உலை வைக்கும் வகையில் கர்நாடகாவின் 'நந்தினி' பால் பாக்கெட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
கர்நாடக பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 'நந்தினி' என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நம்மூரில் எப்படி ஆவினோ அதே போல் தான் கர்நாடகாவில் நந்தினி. பச்சை நிற பாக்கெட், ஆரஞ்ச் நிற பாக்கெட் என ஆவின் பால் எப்படி விற்பனை செய்யபடுகிறதோ அதே போல் தான் கர்நாடகாவின் மூலை முடுக்கெல்லாம் நந்தினி பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நந்தினி பால் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மற்றும் புதுச்சேரியில் நந்தினி பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்ய விரும்புவதாகவும் மேற்காணும் மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பால் பேக் செய்யும் வசதியுள்ள ஆலைகள் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பால் விற்பனையை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழில் 'நந்தினி' பால் என்று பிரிண்ட் செய்து கவர்கள் வெளியிட்டுள்ளது கர்நாடக பால்வளத்துறை. இதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் கர்நாடகாவின் நந்தினி பாலை விற்பனை செய்ய முகவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டிற்குள் கடையை பரப்பி பால் கொள்முதலில் ஈடுபடுவதால் ஆவினுக்கு பால் ஊற்றுவதை விவசாயிகள் குறைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது கர்நாடகாவின் நந்தினியும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட்டால் ஆவின் பால் கொள்முதல் இன்னும் மோசமாகக் கூடும். இதனால் ஆவின் உயர் அதிகாரிகளும், பால் வளத்துறை அதிகாரிகளும் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு நந்தினி பால் விற்பனையை பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவிடம் காவிரியில் தண்ணீர் கேட்டால் அதை தருவதை விடுத்து, பாலை தமிழ்நாட்டில் விற்று பணமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications