கந்த சஷ்டி கவசம்.. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 2 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 2 பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற You Tube சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரை சேர்ந்த குகன் ஆகிய இருவரை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications