கரூர் கூட்ட நெரிசல்.. வாக்கி டாக்கி மூலமாக தவெகவினருக்கு கூறினோம்.. சிபிஐயிடம் எஸ்பி சொன்ன பதில்!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலுக்கு தமிழக அரசின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம் என்று சிபிஐ விசாரணையில் தவெக நிர்வாகிகள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு, கரூர் மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலமாக தவெக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக தகவல் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிஐ விசாரணை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது.

ஏற்கனவே முதற்கட்ட விசாரணையை கரூரில் மேற்கொண்டுவிட்ட சூழலில், அடுத்தக்கட்ட விசாரணையை சிபிஐ டெல்லியில் தொடங்கி இருக்கிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் 2ஆம் நாளாக டெல்லியில் ஆஜராகி இருக்கின்றனர்.
அதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் மாவட்ட காவல்துறையும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறது. இந்த விசாரணையின் போது தவெக நிர்வாகிகள் தரப்பில், கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுக அரசுதான் காரணம். கரூரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று தடுத்து நிறுத்தி இருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு தமிழக அரசின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம். தவெக தலைவர், நிர்வாகிகளின் வாகனங்களை வழிநடத்தியதே காவல்துறை தான் என்றும் கூறி இருக்கின்றனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலமாக தவெக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகள் கொண்டு சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். தவெக நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிபிஐ அடுத்தக்கட்டமாக எந்த கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ











Click it and Unblock the Notifications