புழல் சிறையில் தூக்கமின்றி தவித்த நடிகை கஸ்தூரி! குறைந்த அளவே உணவு சாப்பிட்டதாக தகவல்
சென்னை: சர்ச்சை பேச்சு தொடர்பாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந்த அளவே உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வன்கொடுமை சட்டம் போல பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். கஸ்தூரியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார். எனினும், இதற்கிடையே, கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைனைத்தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதற்கு மத்தியில் நடிகை கஸ்தூரி தலைமறைவு ஆனதால், அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு நடிகை கஸ்தூரி, ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கஸ்தூரியை கைது செய்தனர். சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கஸ்தூரிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்பட்டுள்ளார். கஸ்தூரி நேற்று இரவு சிறையில் தூக்கமின்றி அவதிப்பட்டதாக சொல்லபடுகிறது. நேற்று பிற்பகலில் கஸ்தூரியை சிறைக்கு கொண்டு சென்ற போது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது.
அதை அவர் சாப்பிடாமல் தவிர்த்து உள்ளார். இரவில் கலவை சாதம் வழங்கப்பட்டுள்ளது. அதை குறைந்த அளவு சாப்பிட்டுள்ளார். இன்று காலை பொங்கல், கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. அதனையும் குறைந்த அளவே சாப்பிட்டதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது சக கைதிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரி, ஏ 1 வகுப்பில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்க வாய்ப்புள்ளது. இதற்கு அவர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும். ஜெயிலில் முதல் நாள் என்பதால் நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சக கைதிகளுடன் ஒரே ஹாலில் வைக்கப்பட்டு இருந்த கஸ்தூரி இன்று வேறு அறைக்கு மாற்றப்பட்டு சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications