'அந்த குழந்தையே நீங்க தான் சார்'... 'க்யூட்' பேபிக்கு 'தினகரன்' என்று பெயர்.. 'பலே' அமமுக வேட்பாளர்
சென்னை: அமமுக வேட்பாளர் ஒருவர் தினகரனே 'பார்யா..' என்றும் வியக்கும் அளவுக்கு ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
Recommended Video
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட குமார குடியில் அமுமுக தினகரன் அணி வேட்பாளர் நாராயணசாமி குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர் நாராயணசாமிக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மழவராயநல்லூர் நந்தீஸ்வர மங்கலம் வட்டதுர் சோழதரம் ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் அப்பாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் பேசுகையில், 'டிடிவி தினகரன் தமிழ்நாடு முதல்வரானால் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சாலை வசதி குடிநீர் வசதி என பல்வேறு வசதிகளை ஒவ்வொரு கிராமங்களுக்கும் செய்து தரப்படும்' என்றார்.
அப்பொழுது மழவராயநல்லூர் கிராமத்தில் லஷ்மி - குமார் தம்பதியர், பிறந்து 15 நாளே ஆன, தங்கள் ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி கேட்டனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாராயணசாமி, குழந்தைக்கு 'தினகரன்' என தன் கட்சித் தலைவரின் பெயரையே சூட்டினார்.