திருக்குறளின் அறத்துப்பாலை முடித்துவிட்டேன்! பொருட்பாலுக்குள் புகுந்துவிட்டேன்! வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: திருக்குறளில் அறத்துப்பாலுக்கு உரை எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து தற்போது பொருட்பாலுக்கு எழுதி வருகிறார்.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்து பால் ஆகிய மூன்று இயல்கள் உள்ளன. இவற்றிற்கு கவிப்பேரரசு உரை எழுதி வருகிறார். அந்த வகையில் அவர் அறத்துப்பாலை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டார்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்.
அறிவித்தபடி
திருக்குறள் அறத்துப்பால்
உரையெழுதிவிட்டேன்; பொருட்பாலுக்குள்
புகுந்திருக்கிறேன்
கடலைக் கடப்பதற்குப்
பறக்குமொரு பட்டாம்பூச்சியின்
பதற்றத்தோடும்
கண்தெரியாத தாயொருத்தி
தன் மகளுக்குத்
தலைப் பிரசவம் பார்க்கும்
அக்கறையோடும் அச்சத்தோடும்
எழுதுகிறேன் எழுதுகிறேன்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
ஆனால்,
ஒரு மலையைச் சிலைசெய்யும்
சிற்றுளியின் நம்பிக்கையோடு
இயங்குகிறேன்
உலகத் தமிழ் உறவுகளே!
— வைரமுத்து (@Vairamuthu) February 15, 2025
வணக்கம்.
அறிவித்தபடி
திருக்குறள் அறத்துப்பால்
உரையெழுதிவிட்டேன்; பொருட்பாலுக்குள்
புகுந்திருக்கிறேன்
கடலைக் கடப்பதற்குப்
பறக்குமொரு பட்டாம்பூச்சியின்
பதற்றத்தோடும்
கண்தெரியாத தாயொருத்தி
தன் மகளுக்குத்
தலைப் பிரசவம் பார்க்கும்
அக்கறையோடும் அச்சத்தோடும்… pic.twitter.com/jpTk17AKDO
இந்த உரை
தமிழின் நிகழ்தலைமுறைக்கு
நெருக்கமாய் இருக்கும்
என்று நினைக்கிறேன்
தமிழினமே துணைபுரி;
தமிழே அருள்புரி;
எழுதிமுடிப்பேன் குறள்வரி
நன்றி. இவ்வாறு தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications