தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த, அரசு அனுமதியோடு, மும்பை, கொல்கத்தா போல விபச்சார விடுதிகள் இயங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கும்மிடிபூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காயல் அப்பாஸ், மும்பை, கொல்கத்தா போல தமிழகத்திலும் விபச்சார விடுதிகளை அனுமதித்தால் குற்றங்கள் குறையும் என்றும், முதலமைச்சர் ஜோசப் விஜய் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

TVK Crime

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் தலைவர் காயல் அப்பாஸ் வைத்துள்ள கோரிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யபட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

மேலும் இந்தச் சபவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

உயிரிழந்த சிறுமியின் குடும்பதாரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும்.

சிறுமி பாலியல் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து பிணையில் கூட விடாமல் சாகும்வரை சிறைபடுத்தினால் மட்டுமே இது போன்று, மிகவும் கொடூரமான முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

எனவே கொல்கத்தாவில் சோனா காட்சி மற்றும் மும்பையில் கிரன் சாலை போன்ற இடங்களில் அந்த அந்த அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. அந்த மாநிலங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இது போன்று தமிழ்நாட்டில் முக்கிய மாநகரங்களில் விபச்சார விடுதிகள் அரசு அனுமதியோடு இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் இது போன்று பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

சிறுமிகள், பெண்களின் பாதுகாப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+