Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழடி அகழாய்வு.. அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒன்றிய அரசுக்கு ஏன் தயக்கம்? தங்கம் தென்னரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5,350 ஆண்டுகள் பழமையானவர்கள், தொழில்நுட்பம் கொண்டவர்கள், மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகளானது நடந்து வருகின்றன. தற்போது 10 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த 2023 ஆம் ஆண்டு, முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையானது மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

keezhadi-excavation-even-though-scientific-studies-agree-why-is-the-union-government-hesitant-tha

இந்த அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்திருந்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையினை வழங்காதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. சமீபத்தில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கீழடி அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மத்திய கலாச்சாரத்துறை அரசு இது குறித்து விளக்கம் அளித்தது. இதில், தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வறிக்கையில் சில திருத்தங்கள் செய்யும்படி மட்டுமே கோரினோம் என்றும் தொல்லியல்துறை இயக்குநர் அறிவுறுத்திய திருத்தங்களை ஆய்வாளர் செய்யவில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது. மேலும் கீழடி அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் எழுவது ஒரு கற்பனைக் கதை.

இது இந்திய தொல்லியல் துறையை மோசமான கையில் சித்தரிக்கக் கூடிய நோக்கத்தை கொண்டுள்ளது. தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தில், ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு, உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+