தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை(மே7) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று புதிதாக வெற்றி பெற்ற தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்க உள்ளார்கள். மறுநாள் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 keezhPennathur Assembly Member K. Pichandy as the temporary Speaker

இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் இன்று (மே 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநர், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார். அவர், 10.05.2021 திங்கட்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு ஆளுநர் முன் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்வார்" என்று கூறியுள்ளார்.

1996 முதல் 2001 வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் பிச்சாண்டி . நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+