முஸ்லிம்களை குற்றவாளியாக சித்தரிப்பதா.. பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஜவாஹிருல்லா ஆவேசம்
கேரளா யானை கொல்லப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "மலப்புரம் முஸ்லிம் மக்களை குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலப்புரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்" என்று யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜவாஹிருல்லா காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. இதற்கு முந்தைய காலகட்டத்தில், காட்டு விலங்குகள் மீது எத்தனையோ தாக்குதல்கள் நடந்திருந்தாலும், இப்போது நடந்ததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.. இந்த அதிர்ச்சி இன்னும் விலகவும் இல்லை.

பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தபடியே உள்ள நிலையில், யானை மரணத்தை வைத்தும் மதரீதியான கருத்துக்களும் எழுந்து வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி, "கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில்தான் வனவிலங்கு வேட்டையாடுதல் நடக்கிறது இதுவரையாரும் தண்டிக்கப்படவில்லை, 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளதில் என்ன நடவடிக்கை எடுத்தது கேரள அரசு" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேனகா காந்தி உட்பட பாஜக தலைவர்களின் இத்தகைய கருத்துக்களுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் அறிக்கை ஒன்றினை காட்டமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
"கேரள மாநில வனப்பகுதியில் பழத்தில் வெடி வைத்து ஒரு கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் யானை மரணத்தை வைத்து மத மோதல்களை உருவாக்கும் நோக்கத்தோடு பாஜக தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவது கண்டனத்திற்குரியது.
யானையின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, மலப்புரம் மாவட்டம் இந்தியாவிலேயே அதிக வன்முறைகள் நடக்கும் மாவட்டம் என்றும், மூன்று நாட்களுக்கு ஒரு யானை அப்பகுதி மக்களால் கொல்லப்படுகிறது என்றும், மலப்புரம் சாலைகளில் விஷத்தை வைத்து 300 முதல் 400 பறவைகள் மற்றும் நாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படுகிறது என தனது விஷமக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமானோர் வாழும் மாவட்டமான மலப்புரம் மாவட்டத்தை தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள மேனகா காந்தியின் இதுபோன்ற மதவெறுப்புணர்வு கருத்து வன்மையாகக் கண்டனத்திற்குரியது. இறந்த யானை காயத்துடன் ஆற்றிலிருந்த இடம் மலப்புரம் மற்றும் பாலக்காடு எல்லை. யானை இருந்த இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாவட்ட மக்களை ஈவிரக்கமற்ற மனிதர்களாகச் சித்தரித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
யானை மரணம் குறித்து அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் எந்த ஆதாரமுமின்றி மலப்புரம் முஸ்லிம் மக்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலப்புரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன" என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications