Kesava Vinayagam: தமிழக பாஜக பதவியிலிருந்து நீக்கப்பட்ட கேசவ விநாயகத்திற்கு! ஆர்எஸ்எஸ்ஸில் புதிய பொறுப்பு!
சென்னை: தமிழக பாஜக மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கேசவ விநாயகம், வட தமிழகத்தின் ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த மாநில அமைப்புச் செயலாளர் பதவி ஆர்எஸ்எஸ்ஸில் இருந்த பிரசோப குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தனது பதவியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் நடத்திய தொடர் கூட்டங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்களான கே. அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பணிகளுக்காக 72 பேர் கொண்ட பணிக் குழுவை கேசவ விநாயகம் அறிவித்த சில நாட்களிலேயே இந்த மாற்றம் வந்துள்ளது. இதற்கிடையே, முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனிப்பட்ட காரணங்களுக்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.
அண்ணாமலை விலகியதைத் தொடர்ந்து, சில இடங்களுக்கு ஆலோசனை இல்லாமல் பணிகள் ஒதுக்கப்பட்டதால், பா.ஜ.க.வின் சில தலைவர்கள் அதிருப்தியில் இருந்ததாகப் பேச்சுக்கள் எழுந்தன. கேசவ விநாயகம், 2015ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பா.ஜ.க.வின் இணை அமைப்பாளர் செயலாளராக நியமிக்கப்பட்டவர். பின்னர் தமிழக பாஜக மாநில அமைப்புச் செயலாளர் பதவிக்கு வந்தார்.
பி.எல்.சந்தோஷ் கலந்து கொண்ட கூட்டங்களில், தேர்தல் தயார் நிலை மற்றும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. "புதிய முகங்களை களமிறக்க வேண்டும். ஏற்கெனவே பதவியில் உள்ளவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்குவதைவிட, தி.மு.க.வை தோற்கடிக்கும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நிறுத்துவதே எங்கள் நோக்கம்" என்று ஒரு தலைவர் தெரிவித்தார்.
சந்தோஷ், தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகளுடன் தனியாகவும் ஒரு கூட்டம் நடத்தினார். அங்கு தேர்தல் தயார் நிலையை ஆய்வு செய்த அவர், பூத் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தினார். "2021ஆம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20% கூடுதல் இடங்கள் கிடைக்கும்" என ஒரு மூத்த தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரச்சாரப் பணிகள் மற்றும் குழு நியமனங்கள் குறித்த உள் விவாதங்களுக்கு இடையே, கட்சியின் தேர்தல் செய்தியைப் பலவீனப்படுத்தக் கூடிய பொது அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று தலைவர்களை அவர் எச்சரித்தார்.
கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பதில் பிரசோப குமார் நியமிக்கப்படுவார் என்றும் கேசவ விநாயகம் மீண்டும் ஆர்எஸ்எஸ்ஸுக்கே சென்றுவிடுவார் என சொல்லப்பட்டது. அதே போல் இன்றைய தினம் கேசவ விநாயகத்திற்கு வட தமிழகத்தின் ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அது போல் அண்ணாமலைக்கும் முக்கிய பதவி கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. தமிழக பாஜக சக்தி கேந்திராவின் (வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைப்பது) தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
-
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
இனி எனக்கு எல்லாமே அரசியல் தான்.. தவெக வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபனாக பேசிய விஜய் -
மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆட்டோவை ரிசர்வ் செய்ய போட்டா போட்டி! Auto ஓனர் காட்டில் மழை!












Click it and Unblock the Notifications