Kushbu: குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணம் எப்போது, எங்கு நடக்கிறது? வெளியான தகவல்!
சென்னை: நடிகை குஷ்பு- இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் எங்கு, எப்போது நடைபெறுகிறது என்பது இதுவரை தெரியாமலேயே இருக்கிறது. முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கும் நிலையில் திருமணம் எப்போது என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.
குஷ்பு - சுந்தர் சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமண வேலைகள் படுஜோராகத் தொடங்கிவிட்டன. இதற்கான முதல் திருமணப் பத்திரிகையை டெல்லியில் பிரதமர் மோடிக்கு நேரில் வழங்கிய குஷ்பு, அடுத்ததாக தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பல விஐபிக்களுக்கு குஷ்பு பத்திரிகை வைத்து வரும் நிலையில், பல இடங்களுக்குத் தனது வருங்கால மருமகனையும் கூடவே அழைத்துச் செல்கிறார். இதனால், யார் இந்த மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
இந்நிலையில், தனது மருமகன் ஷ்ரவன் குறித்து குஷ்புவே சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். ஷ்ரவன் பக்கா சென்னை பையன் தான் என்றாலும், அவருக்கு சினிமா உலகோடு எந்தத் தொடர்பும் இல்லையாம். அவர் கடல் அலைகளை ஆளும் ஒரு மெர்ச்சன்ட் நேவி ஆபீஸர் (Merchant Navy Officer) ஆவார்.
அவந்திகாவும் ஷ்ரவனும் கடந்த சில காலமாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணையவுள்ளது. உயரமான அவந்திகாவிற்கு ஏற்றாற்போல ஷ்ரவனும் நல்ல உயரமாகவும், ஹேண்ட்ஸமாகவும் இருப்பதாக சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
எல்லாம் சரி, இவர்களது திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திருமணம் எங்கு எப்போது நடைபெறுகிறது என்பது குறித்து குஷ்பு இதுவரை வெளிப்படுத்தவே இல்லை.
அதாவது வரும் ஜூன் 25 ஆம் தேதி இந்த திருமணம் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறதாம். நயன்தாரா உள்ளிட்டோரின் திருமணம் எப்போது, எந்த இடம் உள்ளிட்டவை வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையில் குஷ்பு மகளின் திருமணம் மட்டும் ஏன் யாருக்கும் சொல்லாமல் நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருமணம் குறித்த தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பதற்கு பிரைவசிதான் காரணம் என்கிறார்கள். எது எப்படியோ இந்த திருமணத்திற்கு முதல்வர் விஜய் கட்டாயம் செல்வார் என்றும் அவர் முதல்வரானதும் செல்லும் முதல் திருமண நிகழ்ச்சி குஷ்பு வீட்டுடையது என்றும் தெரிவிக்கிறார்கள்.
பிரபல இயக்குநர் சுந்தர் சி மற்றும் தயாரிப்பாளர் குஷ்பு நினைத்திருந்தால் தங்களது மகளை தமிழ் சினிமாவிலேயே பெரிய பட்ஜெட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அவந்திகா சொந்த உழைப்பை மட்டுமே நம்பியுள்ளார்.
பெற்றோரின் எந்தப் பரிந்துரையும் இல்லாமல், அவராகவே ஆடிஷனில் கலந்துகொண்டு தான் மலையாளத்தில் வெளியான 'ஆரம்பம்' திரைப்பட வாய்ப்பைப் பெற்றார். மலையாள திரையுலகில் கெரியரை துவங்கிய அவந்திகாவின் முதல் தமிழ் படம் அட்டாக்கர். தனுஷ் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் அட்டாக்கர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. திருமணத்திற்கு பிறகும் அவந்திகா நடிக்க, ஷ்ரவன் ஓகே சொல்லிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications