மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல்
சென்னை: ''மாஸ் வைத்து கொண்டு ஜெயிக்க முடியாதுங்க. அண்ணாமலை இவ்வளவு மாஸ் வைத்து கொண்டு அவரது சீட்டில் ஜெயித்து இருக்கலாமே. பாஜகவில் அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என்று நான் கூறமாட்டேன்'' எனக்கூறி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சீண்டி உள்ளார் நடிகை குஷ்பு. இது அண்ணாமலை ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சீண்டும் வகையில் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பாஜகவில் குஷ்பு துணை தலைவராக உள்ளார்.

இந்நிலையில் தான் செய்தி நிறுவனத்துக்கு குஷ்பு பேட்டி ஒன்றை வழங்கினார். அந்த பேட்டியில் குஷ்புவிடம், ''பாஜகவை பொறுத்தவரை வாக்கு சதவீதம் அண்ணாமலை வந்த பிறகு அதிகரித்துள்ளது என்ற பார்வை உள்ளது. நயினார் நாகேந்திரன் வந்த பிறகு அவரது அணுகுமுறை வேறு விதமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. அண்ணாமலையின் பெயரை சொல்லும்போது அதிக சத்தம் வருகிறதே?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாது
அதற்கு குஷ்பு, ''மாஸ் வைத்து கொண்டு ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலை இவ்வளவு மாஸ் வைத்து கொண்டு அவரது சீட்டில் ஜெயித்து இருக்கலாம். நான் சொல்வது கட்சி ஜெயிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யார் ஜெயிக்கிறாங்களோ, இல்லையோ, கட்சி ஜெயிக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்.
அண்ணாமலைக்கு பின் - முன் என்பது இல்லை
அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் பாஜகவுக்கு அஸ்திவாரம் வைத்தது இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தான். 5 ஆண்டுகளாக நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கியது என்று சொன்னாலும் கூட தமிழிசை சவுந்தரராஜன் கட்சிக்காக உழைத்தார்கள். மக்கள் அவரை கேலி செய்தார்கள். ஆனால் அவர் கட்சிக்காக நிற்கிறேன். கட்சிக்காக உழைக்கிறேன் என்று நின்று இறங்கி வேலை செய்தார்கள்.
தமிழிசைக்கு பின் - முன்
தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின், தமிழிசை சவுந்தராஜனுக்கு பின் என்று வேண்டுமானால் கூறலாம். அதை தான் நான் சொல்வேன். அண்ணாமலை 3 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் அரசியலுக்கு என்று எப்போது வந்தார்? இப்போது தானே வந்தார். ஸ்டாலின் 42 ஆண்டுகளுக்கு பிறகு தான் தலைவராக வந்தார். அதுவரை அவர் இளைஞரணியில் மட்டும் தான் இருந்தார். திமுகவை பொறுத்தவரை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என்று தான் பார்த்து வருகிறோம்.
அஸ்திவாரம் யார் வைத்தது?
என்னை பொறுத்தவரை பாஜகவில் இருந்த தலைவர்கள் அனைவரும் மாபெரும் தலைவர்கள். ஜெயித்து இருக்கீர்களா? இல்லையா? என்பது கிடையாது. அஸ்திவாரம் வைத்தது யார்? என்று பார்த்தால் பாஜக என்று கட்சி இருப்பது கூட தெரியாத நிலையில் இல கணேசன், எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், வானதி இருந்தாலும் கட்சிக்காக உழைத்தவர். இன்று நயினார் தலைவராக இருக்கிறார். அவர் தனது பாணியில் வேலை செய்கிறார். அண்ணாமலை வேறு பாணியில் வேலை செய்தார். நயினார் சீசன் அரசியல்வாதி. அவரது அப்ரோஜ் வேறு விதமாக உள்ளது.
சட்டம் தெரிந்தவர் அண்ணாமலை
ஆனால் அண்ணாமலை நன்றாக பேசக்கூடியவர். அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வந்தவர். எங்கு பேச வேண்டும்? எவ்வளவு பேச வேண்டும்? என்ற மீட்டர் அவருக்கு தெரியும். சட்டம் தெரியும். அதனால் அவர் எளிதாக மக்களிடம் கருத்துகளை கொண்டு போய் சேர்க்கிறார். ஆனால் அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என்று கூறினால் அதனை நிச்சயமாக ஏற்கமாட்டேன்'' என்றார்.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications