ஆளே இல்லாத கடையில் யாருக்கு அய்யா டீ ஆத்துறீங்க.. எப்பவுமே நடிப்புதானா?.. மோடியை வாரும் குஷ்பு
Recommended Video
சென்னை: ஒரு பாலத்தின் மீது மோடி நடப்பது போன்ற வீடியோவில் பாலத்தின் கீழே யாருமே இல்லாத நிலையிலும் மோடி மக்களை பார்த்து கையசைப்பது போன்ற வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலாய்த்துள்ளார்.
ஒரு பாலத்தின் திறப்பு விழாவையடுத்து அந்த பாலத்தின் மீது மோடி நடந்து செல்லும் வீடியோ காட்சிகளை குஷ்பு வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் டுவிட்டர் கூறுகையில் என்ன மோடிஜி, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பெருங்கூட்டத்தை பார்த்து கையசைக்கிறீர்களா.
|
டிராலி, கேமரா
ஆளே இல்லாத கடையில் யாருக்கு அய்யா டீ ஆத்தறீங்க. இதுபோல் எத்தனை சுயவிளம்பரங்களை நீங்கள் செய்ய போகிறீர்கள். மக்களே பாலத்தின் சுவற்றில் உள்ள கேமராவின் நிழலையும், டிராலியையும் பார்க்க மறக்காதீர்.
|
குஷ்பு
எப்போதும் நடித்துக் கொண்டே இருக்கிறார். பிரதமர் அவர்களே எப்போது நீங்கள் பிரதமர் பணியை உண்மையில் ஆற்றுவீர்கள்? என கேட்டுள்ளார் குஷ்பு. இதற்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டர்வாசி ஒருவர் கூறுகையில் ஆ குஷ்பு, இந்த படத்தில் உள்ள கூட்டத்தை பார்க்க கண்ணாடியை பயன்படுத்துங்கள் என கிண்டல் செய்து பாலத்தின் மீதிலிருந்து மோடி கூட்டத்தை பாரத்து கையசைக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.
|
பதிலடி
இதற்கும் குஷ்பு பதிலளித்துள்ளார். அதில் ஆவ்... உங்கள் நம்பிக்கையை நான் சிதைப்பதற்கு என்னை மன்னியுங்கள். நான் அனுப்பிய வீடியோவில் மோடி கையசைக்கும் போது ரயிலும் ரயில்வே டிராக்கும் இருக்கிறது. நீங்கள் அனுப்பிய படத்தில் ரயில்வே டிராக் இருக்கிறதா. கண்ணாடியை போட்டு கொண்டு நீங்கள் பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இடிக்கிறதே!
குஷ்பு சொல்வது நியாயம்தான். மோடி கையசைக்கும் வீடியோவில் இருக்கும் ரயில்வே டிராக் கூட்டம் இருக்கும் படத்தில் இல்லாதது ஏன். அப்படியே அங்கு ரயில்வே டிராக் இருந்திருந்தாலும் அவ்வளவு கூட்டம் அங்கு கூட வாய்ப்பில்லை. எனவே ஏதோ ஒன்று இடிக்கிறதே!